Wednesday, July 2, 2025

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (மார்ச் 23) மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பங்கேற்றனர்.

இதேபோல், திருநெல்வேலி, சேலம், திருச்சி, நாமக்கல், மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: பட்ஜெட் அறிவிப்பில், எங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது. எங்கள் கோரிக்கைகள் கேள்விக்குறியானது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news