இந்தியாவின் பொருளாதாரத்தில் இன்று ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கி தனது புதிய பணவியல் கொள்கை முடிவை வெSSSSளியிட்டு, ரெப்போ விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. இதனால், இதுவரை 6 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம், இப்போது 5.5 சதவீதமாக மாறியுள்ளது.
இந்த முடிவை, ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் இன்று உறுதிப்படுத்தினார். இது ஏன் முக்கியமா என்றால் – ரெப்போ விகிதம் என்பது, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கும் வட்டிவிகிதம். இது குறைந்தால், வங்கிகளும் நம்மிடம் கொடுக்கும் கடன்கள், குறிப்பாக வீட்டுக்கடன், கல்விக் கடன், மற்றும் வாகனக் கடன்களின் வட்டி விகிதங்களும் குறையும்.
இது குறைந்தது என்றால் என்ன லாபம்? வீட்டுக்கடன், வாகனக் கடன், அல்லது பர்சனல் லோன் எடுத்தவர்கள்… அவர்கள் மாதத் தவணையான EMI குறைய வாய்ப்பு அதிகம். எடுத்துக்காட்டாக, ஒரு 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனில் மாதம் ₹1,000 முதல் ₹1,500 வரை குறையும் வாய்ப்பு உள்ளது. இந்த வட்டிவிகித குறைப்பு, நீண்டகால கடன்களுக்கே அதிக நன்மை. குறிப்பாக, 10-20 ஆண்டுகள் ஆகிய கடன்களுக்கு.
வங்கிகள் சில நாள்களுக்குள் புதிய வட்டி விகிதங்களை அறிவிக்கலாம். இதனால், தற்போது கடன் எடுக்க எண்ணுகிறவர்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்கி, EMI-ஐ சுமுகமாக செலுத்தலாம்.
மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த வட்டிவிகித குறைப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தூண்டுதல். வணிகக் கடன்கள் குறைந்த வட்டியில் கிடைக்கலாம். தொழில்கள் விரிவாக வளர வாய்ப்பு உருவாகும்.
ஆனால் இதிலொரு நுணுக்கம் உள்ளது – வட்டி விகிதம் குறைந்தாலும், அதை உங்கள் வங்கி எப்போது மாற்றும் என்பதும் முக்கியம். சில வங்கிகள் உடனே அதனை மாற்றும், சிலர் எப்போதாவது மாதக் கணக்கில் செய்வார்கள்.
மொத்தத்தில், இந்த வட்டி விகித குறைப்பு – சாதாரண கடன் வாங்குபவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் – ஒரு பெரிய நிவாரணம். இது போன்ற நல்ல மாற்றங்களை பயன்படுத்திக்கொண்டு, திட்டமிட்டு செலவிடுவதுதான் நம்முடைய பங்கை நிறைவேற்றுவது.