நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகிய இருவரும் பல ஆண்டுகள் கழித்து இணைந்துள்ள படம் தலைவர் 173. அதாவது, கமல் ஹாசன் இந்த திரைப்படத்தை தயாரிக்க ரஜினிகாந்த் ஹீரோவாக சுந்தர் சி இப்படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர்.
இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தாலும், அது நீடிக்கவில்லை. ஏனென்றால், நேற்று தலைவர் 173 படத்திலிருந்து தான் விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி அறிவித்தார். இந்த விலக்களுக்கு காரணம் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இயக்குநர் சுந்தர் சி ஜாலியான கதையின் ஒன்லைன் ரஜினியிடம் கூறியுள்ளாராம். ஆனால், ரஜினி அது திருப்த்திகரமாக இல்லையாம். ஆரம்பத்தில் இந்த கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், மாஸ் எலிமெண்ட்ஸ் இருக்கும் கதையை அவர் விரும்பியுள்ளார். ஸ்கிரிப்ட்டில் மாற்றங்களை கூறியுள்ளாராம்.
ஆனால், தான் அதற்கு ஏற்ற ஆள் இல்லை என உணர்ந்து இந்த படத்திலிருந்து வெளியேற சுந்தர் சி முடிவு செய்துவிட்டாராம். ஆனால் அவரை மீண்டும் அழைத்து வர முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது என தகவல் தெரிவிக்கின்றனர். இன்னும் தெளிவான மற்றும் அதிகாரப்பூர்வமாக காரணம் இன்னும் வெளிவரவில்லை. மேலும், என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
