Monday, December 1, 2025

அடிக்கடி வாய் உலர்ந்து போவது நீரிழிவு நோயின் அறிகுறியா? அலட்சியம் வேண்டாம்

நள்ளிரவு நேரத்தில் உறங்கும்போது வாய் உலர்ந்து, தொண்டை வறண்டு, தண்ணீர் அருந்தும் அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். இதை பெரும்பாலும் போதுமான தண்ணீர் குடிக்காததனால் ஏற்படும் சாதாரண நிலையாகவே பார்க்கிறோம். ஆனால் இந்த இரவு நேர வாய் வறட்சி தொடர்ந்து மற்றும் தீவிரமாக இருந்தால், அதை எளிதாக புறக்கணிக்கக் கூடாது. காரணம், இது உங்கள் உடலில் மறைந்திருக்கும் சில நோய்கள் குறித்த முன்னணி அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உங்கள் வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகள், வாய் மற்றும் தொண்டைக்குள் ஈரப்பதம் வழங்க முக்கிய பங்கு வகிக்கின்றன. இச்சுரப்பு குறையும்போது வாய் வறட்சி உருவாகிறது.

இதற்கான காரணங்கள்

  • பகல் நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது.
  • இரவில் காபி அல்லது மது அருந்துதல்.
  • மூக்கடைப்பினால் வாய் வழியாக சுவாசித்து உறங்குதல்.
  • சில மருந்துகளின் பக்கவிளைவுகள்.

இந்த எளிய காரணங்களை கடந்தும் வாய் வறட்சி தொடர்ந்தால், அது உடலில் மறைந்துள்ள சில நோய்களின் வெளிப்பாடாக இருக்கலாம்.

முக்கிய காரணிகள்

நீரிழிவு நோய்

ரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பு, சிறுநீரை அதிகமாக வெளியேற்றும்போது உடல் நீர்ச்சத்தைக் குறைக்கும். இதனால் வாய் வறட்சி ஏற்படும்.

தூக்கத்தில் மூச்சுத்திணறல்

இந்தக் குறைபாடு உள்ளவர்கள், உறக்கத்தின்போது வாய் வழியாக மூச்சு வீச வேண்டிய நிலை ஏற்படும். இதனால் வாய் உலர்ந்து போகும்.

தைராய்டு பிரச்சனைகள்

தைராய்டு சுரப்பு செயலிழக்கும் போது, வாயில் உமிழ்நீர் உற்பத்தி குறைவதால் வறட்சிக்கு வழிவகுக்கும்.

செய்ய வேண்டியவை என்ன?

  • பகல் நேரங்களில் தொடர்ந்து போதுமான தண்ணீர் குடிக்கவும்.
  • இரவு உறங்கும் முன் காபி, டீ, மற்றும் மது அருந்துவதை தவிர்க்கவும்.
  • வாய் வழியாக சுவாசிக்காமல் மூக்கு வழியாக சுவாசிக்க பழகவும்.
  • வாயையும் பற்களையும் எப்போதும் தூய்மைப்படுத்திக்கொள்ளவும்.
  • இம்மாற்றங்கள் செய்த பிறகும் பிரச்சனை நீங்கவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News