அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல், கடந்த வாரம் தாக்குதல் தொடுத்தது. இந்த விஷயத்தில் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. ஆனால் ஈரானோ சிறிதும் அஞ்சாமல் இஸ்ரேலை இறங்கி அடித்து வருகிறது.
‘பழிக்குப்பழி ரத்தத்துக்கு ரத்தம்’ என்பதாக இஸ்ரேல் – ஈரான் சண்டை அமைந்துள்ளது. இந்தநிலையில் ஈரான் இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட்டினை தாக்கியதாக அறிவித்துள்ளது. உலகத்தின் புகழ்பெற்ற உளவுத்துறை அமைப்புகளில் மொசாட்டும் ஒன்று.
அப்படிப்பட்ட மொசாட் மையத்தை நாங்கள் தாக்கிவிட்டோம், அது தற்போது தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது என்று, ஈரான் ராணுவம் மார்தட்டிக் கொண்டுள்ளது. ஆனால் இஸ்ரேலோ அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று, இதை அப்பட்டமாக மறுத்திருக்கிறது.
முன்னதாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால், சக்திவாய்ந்த அயன் டாமை ஊடுருவி இஸ்ரேலுக்குல் ஈரான் தாக்குதல் நடத்தி இருந்தது. தற்போது அடுத்த அடியாக மொசாட் மையத்தையும் இறங்கி அடித்திருக்கிறது. அடுத்தடுத்து விழுந்த இந்த இரட்டை தாக்குதல்களால், இஸ்ரேல் தற்போது நிலைகுலைந்து போயுள்ளது.
எனவே பதிலுக்கு இஸ்ரேலும், ஈரானின் அணுசக்தி மையங்களை திருப்பி அடிக்கலாம் என்று தெரிகிறது. இதனால் இரு நாடுகள் இடையிலான இந்த தாக்குதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது.