Monday, July 7, 2025

நாட்டைவிட்டு வெளியேறுங்கள் : ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு ஈரான் உத்தரவு

ஈரானில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரானில் வசித்துவரும் ஆப்கானியர்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறும்படி ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் மட்டும் ஈரானில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ஆப்கானியர்கள் வெளியேறியுள்ளனர். இன்னும் லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் ஈரானில் வசித்து வரும் நிலையில் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற ஈரான் உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் மோதலின்போது இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஆப்கானியர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news