Wednesday, July 30, 2025

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் 2027-க்குள் நிறைவடையும்   

மும்பை – ஆமதாபாத் இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் வழித்தடத்தின் பணிகள் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் திட்டமிட்டபடி நடந்து வருகிறது.

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) நிர்வாக இயக்குனர் சதீஷ் அக்னிஹோத்ரி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார், மேலும் அவர் கூறுகையில் ,

புல்லட் ரயில் திட்டத்தின் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது திட்டமிட்டபடி பணிகள் நிறைவடையும்.நாங்கள் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம், இது உலகளவில் 4-5 நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.இதன் மூலம்  திட்டத்தை முடிக்க எடுக்கும் நேரத்தைக் குறைக்கிறோம்.

இந்த திட்டத்திற்காக தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் , வையாடக்ட் அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, இது நிலம் கையகப்படுத்தும் தேவைகளைக் குறைக்கிறது மேலும் இந்த தொழில்நுட்பம் நிலம் கையகப்படுத்தும் தேவையை மூன்றில் ஒரு பங்காக குறைத்துள்ளது.

சுமார் 11,000 கர்டர்களை நாங்கள் போட வேண்டும், சாதாரணமாகச் ஒவ்வொன்றும் 1 வாரம் எடுக்கும். எனவே, செயல்முறை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம் மற்றும் நாங்கள் 15 காஸ்டிங் யார்டுகளை நிறுவியுள்ளோம், அதை பயன்படுத்தி கட்டுமான நேரத்தை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் , 2027 ஆம் ஆண்டிற்குள் செயல்முறையை முடிக்க இணைந்து செயல்படுகின்றன. அந்த காலக்கெடுவிற்குள் திட்டத்தை முடிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். கோவிட் தொடக்கம் முதல் இரண்டாம் அலைவரை   கட்டுமானப்பணிகள் பாதித்தது என கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News