இந்திய பாதுகாப்பு துறையில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக, அரசு நடத்தும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 500 Invar வகை டேங்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஏவுகணைகள் anti-tank guided missiles என்று அழைக்கப்படும், இதில் ஒவ்வொன்றும் ராணுவ டேங்குகளிலிருந்தே புறப்படும் வல்லமை மிக்க ஆயுதங்கள். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2,000 கோடி முதல் ரூ.3,000 கோடி வரை என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா தற்போது அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளைப் போலவே பாதுகாப்பு துறையில் அதிக முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது. இதுவரை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஜிடிபியில் 2% மட்டுமே பாதுகாப்பு துறைக்கு செலவிடப்பட்டிருந்தது. ஆனால் இனி இந்த செலவுகள் அதிகரிக்கப்போகின்றன. ஜூன் – ஜூலை மாதங்களில் தயாராகும் துணை பட்ஜெட்டில் இந்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், மொத்த பாதுகாப்பு செலவுகள் ரூ.7 லட்சம் கோடியை தாண்டும் என்பதுதான் கணிப்பு.
2025–26 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே ரூ.6.81 லட்சம் கோடியை பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கமாக அறிவித்திருந்தார். இது கடந்த ஆண்டுக்கான ரூ.6.22 லட்சம் கோடிக்கே பதிலாக, 9.2% அதிகரிப்பாகும். இந்த கூடுதல் நிதி, ஆயுதங்கள், வெடிமருந்துகள், உபகரணங்கள் வாங்கும் தேவைகளுக்கு மட்டுமல்லாமல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் அவசர தேவைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இல்லாமலேயே நிதி ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்திய ராணுவம் ஏற்கனவே பயன்படுத்திவரும் Invar ஏவுகணைகளின் இந்த புதிய தொகுப்பு, பாதுகாப்பு வலிமையை இன்னும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு முக்கிய தகவல் என்னவென்றால், இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து பிரம்மோஸ் ஏவுகணையின் புதிய மற்றும் மேம்பட்ட மாடலை தயாரிக்க பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது. இந்த ஏவுகணை, கடந்த காலத்தில் நடந்த ஆபரேஷன்கள் மற்றும் பாகிஸ்தானுடனான மோதல்களில் திறம்பட செயல்பட்டதின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாடலில், அதிக தூரம், குறைந்த எடை, விமானங்களில் ஏவக்கூடிய சிறிய வடிவம் ஆகியவை அடக்கம். இதற்காக இந்தியா, ரஷ்யாவுடன் முழுமையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. புதிய பிரம்மோஸ் மாடலின் சோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் வரம்பு 800 கி.மீ வரை உயர்த்தப்படும் எனும் திட்டங்களும் உள்ளது.
இந்த அனைத்து வளர்ச்சிகளும், இந்தியாவின் பாதுகாப்பு துறையை உலகத் தரத்தில் நிக்கச் செய்யும் முக்கியமான படிகளாகவே பார்க்கப்படுகிறது.