Thursday, June 12, 2025

இந்தியா -ரஷ்யா இணைந்து செய்யப்போகும் ‘பெரிய சம்பவம்’! மிரளப் போகும் உலக நாடுகள்!

இந்தியா மற்றும் ரஷ்யா—உலகின் இரு முக்கிய ராணுவ சக்திகள்—இப்போது ஒரு புதிய முயற்சிக்குத் தொடக்கம் வைத்துள்ளன. அதுவே, பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்பட்ட புதிய மாடலை ஒன்றாக உருவாக்குவது.

ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தானுடனான சமீபத்திய மோதல்களில், இந்தியா பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாகப் பயன்படுத்தியது. அதன் திறனை நேரில் பார்த்த பின், இந்த ஏவுகணையை இன்னும் மேம்படுத்த வேண்டும் என இந்தியா முடிவு செய்துள்ளது.

புதிய மாடல் பிரம்மோஸுக்காக, இந்தியா ரஷ்யாவிற்கு முழுமையான தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளது. பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி விட்டன. முக்கியமாக, இந்த ஏவுகணையின் தாக்கும் தூரத்தை 800 கி.மீ. வரை உயர்த்துவது குறித்தும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஆரம்ப சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளன.

இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில் எடை குறைக்கப்படும், தூரம் அதிகரிக்கப்படும், மேலும் விமானத்தில் ஏற்றும் வகை பிரம்மோஸ் லைட் ஏவுகணைகளும் உருவாக்கப்படும்.

பிரம்மோஸ் ஏன் இவ்வளவு சக்தி வாய்ந்தது தெரியுமா?

முதல் காரணம் – அதிவேக வேகம். இது Mach 2.8 முதல் 3 வரை பயணிக்கும். இது ஒலியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதிகம். அதனால், எதிரி நாடுகள் அதை தடுக்க முடியாமல் தவிக்கின்றன.

இரண்டாவது – துல்லியமான தாக்கம். இலக்கு நகர்ந்தாலும், பிரம்மோஸ் அதை துல்லியமாகவே தாக்கும். தரை, கடல், விமான இலக்குகளைக் குறி வைத்து தாக்கும் திறன் இதற்கு உண்டு.

மூன்றாவது – தூரத்தைக் கடக்கும் திறன். ஆரம்பத்தில் 290 கி.மீ. வரை தாக்கினாலும், இப்போது இது 400 கி.மீ., 500 கி.மீ.ற்கும் அதிகமாக சென்றுவிடும்.

இந்த ஏவுகணை நிலம், விமானம் மற்றும் கடலில் இருந்து ஏவக்கூடியது என்பதும் இதன் சிறப்பு. இதனால் எதிரியால் எங்கிருந்து தாக்கப்படும் என்று கணிக்கவே முடியாது.

பாகிஸ்தானுடனான மோதலில், இந்தியா இவ்வேளையில் பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது போல, சீனாவிலிருந்து வாங்கப்பட்ட பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகள் செயலற்றவை என நிரூபிக்கப்பட்டது.

இந்த தாக்குதல், இந்தியாவுக்கு பல்வேறு கோணங்களில் “ரியல் டைம் சோதனையாக” செயல்பட்டது. பிரம்மோஸின் திறனை நேரடியாக போரில் சோதித்த முதல் சந்தர்ப்பம் இது என கூறப்படுகிறது.

விரைவில், எடை குறைந்த, சிறிய விமானங்களில் ஏவக்கூடிய பிரம்மோஸ் லைட் ஏவுகணைகளும் வந்துகொண்டிருக்கின்றன. MiG-29, Mirage 2000 போன்ற விமானங்களில் வைத்து இந்தியா எதிரியை துல்லியமாக தாக்கவிருக்கிறது.

இந்த விஷயம் இந்தியாவின் ராணுவ துறையில் ஒரு பெரிய திருப்புமுனையாகவே பார்க்கப்படுகிறது. பிரம்மோஸ்… இனி இந்தியாவின் முழுமையான ஆட்டக்காரி.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news