Saturday, June 21, 2025

இந்தியாவை இனி யாரும் நெருங்க முடியாது.., தயாராகும் ‘SKY MONSTER’!

இந்தியா இப்போது ஒரு பெரிய மாற்றத்துக்குள் செல்கிறது… வான் பாதுகாப்பின் சக்தியை பலப்படுத்த, மிக முக்கியமான ஒரு புதிய போர் விமான திட்டத்தை தொடங்கியிருக்கிறது.

இந்த திட்டத்தின் பெயர் AMCA – அதாவது Advanced Medium Combat Aircraft. இது ஒரு ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம். அதாவது ரேடாரில் தெரியாமல் பறக்கக்கூடிய, மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட போர் விமானம்.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ADA எனும் நிறுவனம் மீது உள்ளது. இந்த நிறுவனமே இப்போது, இந்த விமானத்துக்கான ஐந்து முன்மாதிரிகளை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது.

இந்த முயற்சிக்காக ADA, இந்தியாவில் உள்ள சிறந்த திறமையுள்ள விமானத்துறையிலும் பாதுகாப்புத்துறையிலும் அனுபவமுள்ள நிறுவனங்களை தேர்வு செய்ய ஆர்வ வெளிப்பாட்டை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தில் சேர விரும்பும் நிறுவனங்கள், இந்தியர்களால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களாக இருக்க வேண்டும். அவை தனியாக இருக்கலாம், இல்லை எனில் கூட்டணியாக இருந்தாலும் பரவாயில்லை. முக்கியம் என்னவென்றால், இந்தியாவுக்கே சொந்தமான தொழில்நுட்பமாக இருக்க வேண்டும்.

இந்த விமானங்களை தொடர்ச்சியாக உற்பத்தி செய்யும் வசதியோடும் அந்த நிறுவனங்கள் இருக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு பெரிய திட்டம்.

இதற்கான ஒப்பந்தத்திலிருந்து, மூலம் முதல் முடிவு வரைக்கும் – 8 வருடங்களுக்குள் இந்த திட்டம் முழுமை பெறவேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, விமான வடிவமைப்பு, சோதனை, சான்றிதழ் எல்லாம் இந்த காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

இந்த AMCA விமானம், இந்திய விமானப்படையில் இப்போது உள்ள தேஜாஸ் போர் விமானத்தைப் போலவே, மிக முக்கியமான பங்கு வகிக்கப்போகிறது. இது நடுத்தர எடையிலானது, ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தது.

இந்த திட்டம் வெற்றி பெற்றால், இந்தியா வான் பாதுகாப்பில் ஒரு புதிய அடிச்சுவட்டை வைக்கும். மற்ற நாடுகளுக்கு எதிராக நாமே நம்மை பாதுகாக்கும் திறன் அதிகரிக்கும்…என்று கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news