Saturday, May 31, 2025

பாகிஸ்தானின் உண்மை முகத்தை கிழிக்கும் இந்தியா! சாம்பல் நிற பட்டியலில் இணையுமா?

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்களை தற்போது இந்தியா திரட்டியுள்ளது. இவை அனைத்தும் அடுத்த நிதி நடவடிக்கை பணிக்குழு FATF கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன. இந்தியாவின் நோக்கம் – பாகிஸ்தானை மீண்டும் சாம்பல் பட்டியலில் சேர்ப்பது.

பாகிஸ்தான் தனது பட்ஜெட்டில் 18% பாதுகாப்பு செலவுகளுக்கே ஒதுக்குகிறது. இது உலகில் மோதல் நிறைந்த நாடுகள் செலவிடும் அளவைவிட அதிகம். 1980 முதல் 2023 வரைக்கும், பாகிஸ்தான், IMF உதவி பெற்ற ஆண்டுகளில், தனது ஆயுத இறக்குமதியை 20% உயர்த்தியுள்ளது. இது அந்த நிதியை பயங்கரவாத உள்கட்டமைப்புகளுக்கு தவறாக பயன்படுத்துகிறது என்பதற்கான பெரும் சான்றாக அமைகிறது.

மேலும், பாகிஸ்தானின் கடன் சுமை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அந்த பணம் வரிவருவாயிலிருந்து வரவில்லை, வெளிநாட்டு கடன்களிலிருந்து தான் வருகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.

FATF, 2018-ல் பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் சேர்த்தது. அந்த நேரத்தில் பாகிஸ்தானிடம் 34 அம்சங்களில் செயல் திட்டம் ஒன்று கோரப்பட்டது. சில முன்னேற்றங்கள் நடந்தபோதும், பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்தும் உரிய நடவடிக்கைகள் இல்லை என்பதுதான் கூற்றாக இருந்தது. 2022-ல் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது.

ஆனால் தற்போதைய சூழ்நிலை வேறுவிதமாக உள்ளது. ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதன் பின்னர், பதட்டம் மீண்டும் உச்சத்தை எட்டியது. இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற இராணுவ நடவடிக்கையை தொடங்க, பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலம் பொது பகுதிகளை தாக்கியது. இதற்கு பதிலாக, இந்தியா பாகிஸ்தானின் முக்கிய இராணுவ கட்டமைப்புகளைத் தாக்கியது.

மே 10 அன்று இரு நாடுகளும் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்தாலும், பாகிஸ்தான் அதை உடைத்தது. பின்னர் இரு நாடுகளும் “காலவரையற்ற” போர்நிறுத்தத்துக்கு ஒப்பந்தமானன.

இந்த சூழ்நிலையில், AIMIM எம்பி அசாதுதீன் ஓவைசி, பாகிஸ்தானை மீண்டும் FATF பட்டியலில் சேர்க்க வேண்டிய தேவை குறித்து வலியுறுத்துகிறார். பயங்கரவாத அமைப்புகள் அங்கு பயிற்சி பெற்று, இந்தியாவில் கலவரங்களைத் தூண்டும் முயற்சி செய்கின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியா, IMF-ஐப் பார்த்து, பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதி உதவி பயங்கரவாதத்திற்கு மறைமுக ஆதரவாக இருக்கக் கூடும் என்று எச்சரிக்கிறது. ஆனால் IMF, பாகிஸ்தான் அனைத்து இலக்குகளையும் பூர்த்தி செய்ததால் தான் கடனை வழங்கியதாக கூறுகிறது.

இப்போதைய சூழ்நிலையில், பாகிஸ்தானின் நம்பகத்தன்மையை சர்வதேசம் மீண்டும் சோதிக்கிறது. இந்தியா, பாகிஸ்தானின் உண்மையான முகத்தை உலகிற்கு காட்ட திட்டமிட்டு இருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news