இந்தியா தற்போது உலகத் தளத்தில் ஒரு புதிய உயரத்திற்கு பாய்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், சேவை துறை, வணிகம் என பல துறைகளில் முன்னிலை வகித்தே வந்துள்ள இந்தியா, இப்போது மேலும் ஒரு பெரும் சாதனையை கண்டுள்ளது. உலகத்தில் மிகவும் குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடிய நாடாக இந்தியா முதன்மையாக மாற்றம் பெற்றுள்ளது.
இந்த பட்டத்தை இதுவரை சீனா வைத்திருந்தது. ஆனால் தற்போது, சீனாவை முந்தி இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இது போலி செய்தி அல்ல – அமெரிக்க மற்றும் உலக தரவுகள் வெளியிடும் முக்கியமான நிறுவனங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. தற்போது வியட்நாம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் இடம்பிடித்துள்ளன.
இந்த மாற்றம் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில், குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடிய நாடுகள், உலக நிறுவனங்களுக்கு மிக பெரிய ஈர்ப்பு மையமாக இருக்கின்றன. பெரும் நிறுவனங்கள் அதிக செலவுகளுக்கு பதிலாக, இந்தியா போன்ற நாடுகளை தேர்வு செய்கின்றன. இதன் மூலம், நம்மைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளும், வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். மக்கள் வாழ்க்கை மேம்படும். நாட்டின் வருமானமும் வளர்ச்சி பெறும்.
சீனாவுக்கே இது பெரிய தாக்கமாக இருக்கிறது. உலகின் தொழிற்சாலை என்ற பெயரை சீனா இழக்கத் தொடங்கியுள்ளது. பல நிறுவனங்கள் தற்போது சீனாவை விட்டு இந்தியாவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், J.P. Morgan நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் மேலும் முக்கியமான தகவல்களை கூறுகின்றன. இந்தியாவின் உற்பத்தி விகிதம், அதாவது Manufacturing PMI, 2025 ஏப்ரலில் 58.2 என்ற அளவை எட்டியுள்ளது. அதே நேரத்தில், சேவை துறை PMI 58.7 ஆக உள்ளது.
இதன் மூலம், புதிய தொழிற்சாலைகள் இந்தியாவில் அமைக்கப்படும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். கிராமப்புறங்களில் கூட தொழில்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இந்த வளர்ச்சி இந்தியா முழுவதும் பரவும்.
இந்தியாவுக்கு இது ஒரு புதிய வாயில். உலக நாடுகள் இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பி, முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளன. இது நமக்கு பெருமை தரக்கூடிய விஷயம். எதிர்காலத்தில் இந்த வாய்ப்புகளை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொண்டால், நம் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் மேம்படும்.