Saturday, May 31, 2025

அபாயத்தில் இந்தியா…தோள் கொடுக்கும் ரஷ்யா! ‘அதிபயங்கர ஆயுத சம்பவம் இருக்கு’!

இந்தியாவின் பாதுகாப்பு திறனை அதிகரிக்க ஒரு முக்கியமான முடிவை ரஷ்யா எடுத்துள்ளது. அதிநவீன R-37M ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் திட்டத்தில் ரஷ்யா தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது. இது வெறும் ஒரு ஏவுகணை அல்ல. மெக் 6 வேகத்தில் – அதாவது ஒரு மணி நேரத்தில் 7,400 கிலோமீட்டர் சென்றுவிடும் வேகத்தில் பாயும் இது, 300 முதல் 400 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்கும் சக்தி பெற்றது.

இந்த ஏவுகணைகள், எதிரியின் போர் விமானங்கள், வான்வழி கட்டுப்பாட்டு மையங்கள், டேங்கர் விமானங்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளின் தளவாடங்களை அழிக்க பயன்படுகிறது. ஒரு போர் விமானம் கூட இதில் இருந்து தப்பிக்க முடியாத அளவுக்கு, மிகவேகத்துடன் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை 510 கிலோ எடையுடன், மேலதிக வெடிபொருட்கள் சேர்த்தால் 60 கிலோ கூடுதலாக எடையெடுக்கும்.

இந்திய விமானப்படையில் பயன்பாட்டில் உள்ள Su-30MKI போர் விமானங்களுக்கும், இதை மிகச் சரியாக பொருத்தலாம். இதற்கு முன்பு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கிய S-400 ஏவுகணையும் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இதனை தொடர்ந்து, ஸ்டெல்த் விமானங்களை கண்டுபிடிக்கக்கூடிய அதிநவீன Container-S எனப்படும் OTH ரேடார் அமைப்புகளையும் இந்தியா வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த ரேடார் 3,000 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தில் இருக்கும் வான்வழி அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கையளிக்கிறது. இதன் மூலம் இந்திய வான்பரப்பை இரும்பு மதில் போல பாதுகாக்க முடியும். இதுபோன்ற ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளும், OTH ரேடார் அமைப்புகளும் சேரும் போது, இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் உலகத்தரத்தில் உயர்நிலைக்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news