Monday, December 1, 2025

சட்டவிரோத இருமல் மருந்து விற்பனை: 12 கடைகள் மீது வழக்குப்பதிவு

உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து கோடின் என்ற இருமல் மருந்துகள் சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது காசியாபாத்தில் காகிதம் ஏற்றி வந்த லாரியை தடுத்து சோதனை செய்தனர். அதில் கோடின் என்ற இருமல் மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.57 கோடி மதிப்புள்ள சுமார் 37 லட்சம் மருந்து பாட்டில்கள் சட்டவிரோதமாக பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 12 மருந்து கடைகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News