Saturday, May 31, 2025

இந்த வழிகளை பின்பற்றினால் கரண்ட் பில் ரொம்ப ரொம்ப குறைவாகும்!

ஏசி, கூலர் மற்றும் பிற சாதனங்களின் அதிகரித்த பயன்பாட்டிற்கு இடையே, மின்சாரக் கட்டணத்தைக் குறைத்து கோடையில் பலன் அளிக்கும் ஸ்மார்ட் Tricks சிலவற்றை தெரிந்துகொள்ளுங்கள். இந்த எளிய பழக்கவழக்கங்களால் பெரிய அளவில் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

கடுமையான வெயிலில் இருந்து Escape-ஆக எல்லோரும் கூலர், ஏசி போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். மின்விசிறிகளும் இரவு பகல் பாராமல் இயக்கப்படுகின்றன. இதனால் வீட்டின் மின்சாரக் கட்டணம் அதிகமாக வருவது இயல்பு. ஆனால் சில ஸ்மார்ட் வழிகளில் மின்சாரக் கட்டணத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

இதில் மிக முக்கியமான விஷயம் ஏசி-யை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது. நீங்கள் அதை 24°C இல் அமைத்து, அதனுடன் மின்விசிறியையும் பயன்படுத்தினால், அறை குளிர்ச்சியாக இருப்பதோடு அதே நேரத்தில் மின்சாரப் பயன்பாடும் குறையும்.

மின்சார சாதனங்களை வாங்கும் போது குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் சாதனங்களைத் தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக, 5 நட்சத்திர மதிப்பீடு கொண்ட ஏர் கண்டிஷனர், குளிர்சாதன பெட்டி மற்றும் சலவை இயந்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவை குறைந்த மின்சாரத்தில் சிறந்த செயல்திறனை அளிக்கின்றன.

காலை மற்றும் மாலை நேரங்களில் அறையை குளிர்விக்கும் சாதனங்களை அணைக்கலாம். இது ஆற்றல் நுகர்வையும் குறைக்கும். வாஷிங் மெஷின் முதல் மிக்சி மற்றும் பாத்திரங்கழுவி போன்ற சாதனங்களை இரவில் அல்லது அதிகாலையில் பயன்படுத்தினால் அந்த நேரத்தில் மின்சாரத் தேவை குறைவாக இருக்கும்.

சார்ஜர்கள் மற்றும் சாதனங்களை பயன்படுத்தாதபோது அவற்றை முழுவதுமாக அன்பிளக் செய்யவும். மேலும் ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டியின் காற்று வடிகட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்யவும் ஏனெனில் அசுத்தமான வடிகட்டிகள் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news