எலான் மஸ்கின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கிரோக் ஏஐ, பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். அப்போது, எக்ஸ் தளத்தின் கொள்கைகளை அவர் கடுமையாக விமர்சித்ததுடன், இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, கிரோக் ஏஐயை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான ஆபாசப் படங்கள், பாலியல் ரீதியான படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கி பதிவேற்றம் செய்துள்ள கணக்குகளை கண்டறிந்து, எக்ஸ் நிறுவனம் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “கிரோக் ஏஐ செயலியை பயன்படுத்துபவர்கள் சட்டவிரோதமான தகவல்கள், படங்கள் அல்லது வீடியோக்களை பதிவேற்றம் செய்தால், அவர்கள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சட்டத்திற்கு முரணான தகவல்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் பயனர்களின் கணக்குகள் நிரந்தரமாக தடை செய்யப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
