தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், சமீபத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“எனக்கு விருதுகள் மீது நம்பிக்கை இல்லை. விருதுகளெல்லாம் பைத்தியக்காரத்தனம். 4 பேர் உட்கார்ந்து கொண்டு 7 கோடி மக்களுக்கு பிடித்த விஷயங்கள் சொல்வதற்கு அவர்கள் என்ன மேதாவிகளா?
எனக்கு விருதுகள் கொடுத்தால், போகிற வழியில் குப்பைத் தொட்டியில் வீசிவிடுவேன். ஒருவேளை அந்த விருதில் தங்கம் இருந்தால், அதை அடகு வைத்து அன்னதானம் செய்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
