தமிழ்நாடு அரசு வழங்கும் மின்னணு ரேஷன் அட்டைக்கான விண்ணப்பம் செய்து விட்டேன். ஆனால் மாதங்கள் கழிந்தும் அந்த அட்டை உங்கள் கைக்கு வரவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அரசின் இணையதளமும், தொலைபேசி சேவைகளும், மைய சேவைகளும் உங்களுக்கு துணையாக உள்ளன.
முதலில், உங்கள் விண்ணப்ப நிலையை சரிபார்க்க, தமிழ்நாடு அரசு ரேஷன் தளமான tnpds.gov.in-க்கு செல்லுங்கள். அங்குள்ள “மின்னணு அட்டை விண்ணப்ப நிலை” என்ற பகுதியைத் திறந்து, உங்களுக்குக் கிடைத்த விண்ணப்ப எண்-ஐ உள்ளீடு செய்யவும். இதன்மூலம், உங்கள் அட்டையின் தற்போதைய நிலையை நீங்கள் நேரடியாக அறிய முடியும்.
இல்லையெனில், உங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என பதிவு செய்து, 9773904050 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள். சில நிமிடங்களில் பதில் வந்துவிடும்.
மேலும், 1967 அல்லது 1800 425 5901 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து, உங்கள் விண்ணப்ப விவரங்களை வழங்கி நிலை தெரிந்து கொள்ளலாம். இல்லையெனில், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் விவரங்களை அனுப்புங்கள். அரசுத் தரப்பிலிருந்து உங்களுக்கு பதில் உறுதியாக வரும்.
இவை தவிர, அருகிலுள்ள E-Sevai மையத்திற்குச் சென்று உங்கள் ஆதார் அட்டை விவரங்கள், பதிவு விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கலாம். சில நேரங்களில் இவை தவறாக இருந்தால், அட்டையின் அனுப்பும் செயல்முறை தாமதமாகும்.
60 நாட்கள் கழிந்தும் ரேஷன் அட்டை வரவில்லை என்றால், நீங்கள் நேரடியாக ccsconsumers.tn.nic.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம்.