உலகநாடுகளிடையே நிலவி வரும் மோதல், அமெரிக்காவின் வரிவிதிப்பு குழப்பம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நடுவே இந்திய பொருளாதாரம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குறிப்பாக கடந்த 4 மாதங்களில் இந்தியாவின் பணவீக்கம் 4 சதவீதத்திற்குள்ளாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியா பொருளாதாரம், உள்நாட்டு வாணிபத்தால் இயங்குகிறது என கூறப்பட்டுள்ளது.