இல்லத்தரசிகளே உஷார்! இன்றே கடைசி நாள்..

நாடு முழுவதும் 30 கோடிக்கும் மேற்பட்ட LPG இணைப்புகள் உள்ளன. இதில், 10 கோடி பேர் PMUY திட்டத்தின் கீழ் மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்களை வாங்குகின்றனர். பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ், மத்திய அரசு தற்போது ஆண்டுக்கு 9 மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்களை வழங்கி வருகிறது. அதாவது, ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது.

சமையல் எரிவாயு நுகர்வோருக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஒரு முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதாவது, உடனடியாக ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் e-KYC-யை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் சிலிண்டருக்கான மானியத் தொகை அவர்களின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் என்று தெரிகிறது.அதை செய்யாவிட்டால், அவர்களுக்கு 8 மற்றும் 9 சிலிண்டர்களுக்கு மானியத் தொகை கிடைக்காது என்று கூறப்படுகிறது.

இந்த e-KYC செயல்முறை ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒருமுறை செய்ய வேண்டும்.இந்த செயல்முறை அக்டோபர் 31, 2025க்குள் முடிக்கவில்லை என்றால், நவம்பர் 1 முதல் எரிவாயு நிரப்புதல் மற்றும் மானியங்கள் நிறுத்தப்படும் என்று தெரிகிறது. முன்பு, இந்த இ-கேஒய்சியை முடிக்க மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் இது அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News