மயிலாடுதுறையில் இன்று மதியம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

தென்மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு ‘டிட்வா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று(28.11.2025) மதியம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News