Thursday, May 22, 2025

‘Biometric’ இல்லனா நிலம் உங்களுக்கு கிடையாது! வந்தாச்சு புது ‘Rules’ !

நம் நாட்டில் சொத்துக்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் நிலம் பதிவு செய்வது மிகவும் முக்கியமான கட்டாய செயலாக இருக்கிறது. இதற்காக பத்திரம், பட்டா போன்ற ஆவணங்கள் அவசியமாக தேவைப்படும். பட்டா என்பது நில உரிமையாளர்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ஆவணம். இதில் நிலத்தின் வகை, சர்வே எண், உரிமையாளரின் பெயர் போன்ற முக்கியமான தகவல்கள் இடம்பெறும்.

தற்போது, தமிழ்நாடு வருவாய் துறையின் புதிய நடவடிக்கைகளின் மூலம் நில பதிவு முறைமை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. இந்த புதிய முறை மூலம், நில பதிவு செய்பவர்களுக்கு ஆன்லைன் ஆவண சமர்ப்பிப்பு, பயோமெட்ரிக் சரிபார்ப்பு, மற்றும் டிஜிட்டல் பதிவுகள் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

இந்த புதிய விதிகள் கொண்டு வரப்பட்டதின் முக்கிய நோக்கம், நிலப்பதிவில் நடைபெறும் மோசடிகளை தடுப்பது மற்றும் செயல்முறை முழுவதும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதுதான். இனிமேல், நிலம் வாங்கும் நபரும் விற்கும் நபரும் இருவரும் ஆதார் அடிப்படையிலான ஆவணங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

மேலும், அனைத்து விற்பனை மற்றும் தொடர்புடைய ஆவணங்களும் ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதில் Blockchain தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நிலப் பதிவு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

துணைப் பதிவாளர் அலுவலகத்தில் நேரில் சென்று பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்ய வேண்டும். அதோடு நிலத்தின் துல்லியமான அளவீடு மற்றும் இருப்பிடத்தை சரியாக அறிய ஜிஐஎஸ் அடிப்படையிலான நில வரைபடம் பயன்படுத்தப்படும். இதனால், நில உரிமையில் ஏற்படும் பிரச்சனைகள் குறையக்கூடும் என்பதுடன், அரசு தரவுகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

புதிய விதிகள் அமலுக்கு வந்ததால், விற்பனை ஒப்பந்த ஆவணங்கள், பயோமெட்ரிக் வருகை பதிவு, ஆன்லைன் ஜிஐஎஸ் வரைபடம் மூலம் சொத்துக்கள் பற்றிய சரியான தகவல்களை பெற முடியும். இதில் வரி ரசீது உள்ளிட்ட தேவையான ஆவணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த முறைகள் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால், சொத்து வாங்குவோர் மற்றும் விற்போர் இருவரும் இந்த புதிய விதிகளை தெரிந்துகொண்டு, அவற்றை பின்பற்றுவது மிகவும் அவசியம்.

Latest news