Thursday, December 25, 2025

பெண் குழந்தையை கால்வாயில் வீசிய குழந்தையின் பாட்டி கைது

வேலூர் அரசு மருத்துவமனை அருகே, பிறந்து சில மணி நேரங்களேயான பச்சிளம் பெண் குழந்தையை, அவரது பாட்டியே வாய்க்காலில் வீசியது தெரியவந்துள்ளது.

வேலூர் அரசு மருத்துவமனை அருகேயுள்ள வாய்க்காலில், பிறந்து சில மணி நேரங்களேயான பச்சிளம் பெண் குழந்தை வாய்க்காலில் சில நாள்களுக்கு முன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது குறித்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் தாழனுாரை சேர்ந்த முனியம்மாள் என்பவருக்கு, குறை மாதத்தில் குழந்தை பிறந்ததால், அவரது பாட்டி சுமதியே குழந்தையை வாய்க்காலில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து சுமத மற்றும் அவரது மகன் வினோத்தை போலீசார் கைது செய்தனர்.

Related News

Latest News