Wednesday, October 1, 2025

LPG பயனர்களுக்கு வந்திருக்கும் நல்ல செய்தி! இனி சிலிண்டர் தீர்ந்தாலும் கவலையில்லை! அசத்தும் புது அப்டேட்!

எல்பிஜி சிலிண்டர் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. உங்கள் எரிவாயு சிலிண்டரை ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு எளிதாக மாற்றலாம். இதற்கு காரணமாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் அதாவது PNGRB புதிய LPG இன்டர்ஆப்பரபிலிட்டி ஃபிரேம்வொர்க் (LPG Interoperability Framework) திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இதன் மூலம், நீங்கள் தற்போது இண்டேன் எரிவாயு பயனராக இருந்தாலும், எதிர்காலத்தில் பாரத் கேஸ் அல்லது HP கேஸுக்கு மாற, பழைய இணைப்புகளை ரத்து செய்ய தேவையில்லை. PNGRB பொதுமக்களின் கருத்துக்களை ஏற்கனவே கேட்டுள்ளது, இறுதி வழிகாட்டுதல்களை வழங்கி, அதிகாரப்பூர்வ நடைமுறைத் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் 32 கோடி LPG இணைப்புகள் உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் 17 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. விநியோகத்தில் தாமதங்கள், சிலிண்டர் நிரப்புவதில் இடையூறு போன்ற பிரச்சனைகள் அதிகம்.

இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் விருப்பமான சிறந்த சேவை நிறுவனத்தை தேர்ந்தெடுக்க முடியும். எந்த நிறுவனத்திடமிருந்தும் ரீஃபில்களை பெறலாம். சேவையில் இடையூறு ஏற்பட்டால் அருகிலுள்ள டீலரை எளிதில் தேர்வு செய்து, தற்காலிக ரீஃபில்களைப் பெறலாம்.

சமீப காலமாக சிலிண்டர் விநியோகம் தாமதமாகி, வீடுகள் மற்றும் வணிகத் துறைகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. இந்த புதிய அமைப்பு எல்பிஜி சப்ளையர்களிடையே போட்டியை அதிகரித்து, மீண்டும் நிரப்பலுக்கான காத்திருப்பு நேரத்தை குறைக்கும், சேவை தரத்தை மேம்படுத்தும். PNGRB அக்டோபர் நடுப்பகுதி வரை பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்களைச் சேகரித்து, பிறகு நாடு முழுவதும் திட்டத்தை செயல்படுத்தும் தேதி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News