இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கு ஒரு பெரிய வரம் போன்ற திட்டம் தான்– ஆயுஷ்மான் வே வந்தனா . 2024 அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய இந்த சுகாதார திட்டம், 70 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட அனைத்து இந்தியர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீட்டை வழங்குகிறது.
இது வருமானத்தைப்பற்றிய கேள்வியில்லாமல், ஏற்கனவே உள்ள நோய்களையும் உடனடியாக கவரும் வகையில், ஒரு பரந்த பாதுகாப்பு திட்டமாகும். இதில் மொத்தம் 27 சிறப்புப் பிரிவுகள், 1,961 வகை மருத்துவ நடைமுறைகள், ஹீமோடையாலிசிஸ், இதய சிகிச்சைகள், புற்றுநோய் பராமரிப்பு, முழங்கால் மாற்று, பக்கவாத சிகிச்சைகள் என எல்லாமே இதில் அடக்கம்.
இதற்கு காத்திருப்பு காலமோ, சிக்கலும் கிடையாது. இந்தியா முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகள், அதில் மட்டும் 13,352 தனியார் மருத்துவமனைகளும் உள்ளன – இவை அனைத்திலும் பணம் கொடுக்காமலேயே சிகிச்சை பெறலாம்.
இதை பெற விண்ணப்பிக்க, உங்கள் மொபைலில் ‘ஆயுஷ்மான் செயலி’யை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கவும்.
பின்னர், பயனாளியாக உள்நுழைக, கேப்ட்சா, மொபைல் எண், OTP ஆகியவற்றை உள்ளிடவும்.
உங்கள் ஆதார், மாநிலம் உள்ளிட்ட விவரங்களைத் தட்டி, eKYC முடிக்கவும்.
பின்புறமாக, உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் சேர்க்கலாம்.
ஏற்கனவே PM-JAY திட்டத்தில் இருப்பவர்கள் கூட இதை எடுத்துக்கொள்ளலாம் – இது அவர்களுக்கான காப்பீட்டை இரட்டிப்பாக்கும். தனியார் காப்பீடு உள்ளவர்களும் இதை பெறலாம், ஆனால் இரண்டு திட்டங்களுக்கும் இடையே தேர்வு செய்ய வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், இந்த அட்டை மூத்த குடிமக்களின் வாழ்நாள் நலனுக்கான பாதுகாப்பு. உங்கள் குடும்பத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால், உடனே இந்த திட்டத்தில் இணைத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்.