Monday, January 20, 2025

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. தேனி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Latest news