பாகிஸ்தானில் பெய்த கனமழையால், ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ள நிலையில், வெள்ள நீர் ஓர் ஆசீர்வாதம், சேமித்து கொள்ளுங்கள் என்று அந்நாட்டு அமைச்சர் பேசி இருப்பத சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்து 200 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்னர்.
இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தத் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும் என்றும், மக்கள் சாலைகளில் அமர்ந்து போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்துவதற்கு பதில் அவர்கள், தண்ணீரை தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று கொள்கலன்களில் சேமிக்க வேண்டும் எனவும் கூறினார்.
இந்தத் தண்ணீரை ஓர் ஆசீர்வாதமாக கருத வேண்டும் என்றும், அணைகள் கட்டி இவ்வளவு தண்ணீரைச் சேமிக்க பொதுவாக 8-10 ஆண்டுகள் ஆகும்” என்றார். பாகிஸ்தான் அமைச்சரின் இந்த பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.