Thursday, December 25, 2025

பல மாதங்களாக மன விரக்தி : பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு

சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் கார்த்திகா ராணி (வயது 30). இவர், சென்னை அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவர், மணிவண்ணன் (34) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2019-ம் ஆண்டில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகா ராணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டி.பி.சத்திரம் போலீசார் கார்த்திகா ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் பிரிந்து சென்றதால் கார்த்திகா ராணி, பல மாதங்களாக மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனாலேயே அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News