நடிகர் ரவி மோகன் – கெனிஷா இருவரும் மாலையும், கழுத்துமாக கோயிலில் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. சமீபகாலமாக ரவி மோகன் – ஆர்த்தி இடையிலான பிரச்சினை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி இருவரும் தொடர்ச்சியாக, அறிக்கை வெளியிட்டு வந்தனர். இதுகுறித்து பாடகி கெனிஷா ஒருபக்கம் விளக்கமளிக்க, மறுபக்கம் தங்களுடைய தரப்பு விளக்கத்தை ஆர்த்தியின் அம்மாவும், தயாரிப்பாளருமான, சுஜாதா விஜயகுமாரும் வெளியிட்டார்.
இதையடுத்து தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என, நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தங்களுக்கிடையில் உள்ள பிரச்சினை குறித்து ரவி மோகன் – ஆர்த்தி ஆகிய இருவரும், இனி எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டது.
இந்தநிலையில் பாடகி கெனிஷாவுடன் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி கோயில்களில் ரவி மோகன் அண்மையில் சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு இருவரும் மாலையும், கழுத்துமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன. இதனால் ரவி மோகன் – ஆர்த்தி இடையிலான விவகாரம் தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது.