உலகின் முதல் டிரில்லியனர் எலான் மஸ்க்!!

உலகின் முன்னணி தொழில்நுட்ப தொழிலதிபரான Elon Musk, தனது SpaceX நிறுவனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐபிஓ வெற்றியின் மூலம் உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் Nasdaq பங்குச்சந்தையில் “SPCX” என்ற குறியீட்டில் பட்டியலிடப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் முதல் நாளிலேயே 19 முதல் 23 சதவீதம் வரை உயர்ந்தன. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலரைத் தாண்டியது.

இந்த ஐபிஓ மூலம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சுமார் 75 பில்லியன் டாலர் நிதி திரட்டியது. இது உலகின் மிகப்பெரிய ஐபிஓவாகக் கருதப்படுகிறது. பங்கு விலை உயர்வால் எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 1.1 டிரில்லியன் டாலரை எட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் மனித வரலாற்றில் முதல் முறையாக ஒரு நபர் டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பை கடந்துள்ளார்.

எனினும், இந்த சொத்து அனைத்தும் ரொக்கமாக இல்லாமல், பெரும்பாலும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் பங்குகளாகவே உள்ளது. விண்வெளி தொழில்நுட்பம், செயற்கைக்கோள் இணைய சேவைகள் மற்றும் எதிர்கால செவ்வாய் கிரக குடியேற்றத் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், சில சந்தை ஆய்வாளர்கள் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் தற்போது அதன் உண்மையான மதிப்பை விட அதிகமாக வர்த்தகம் செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், எலான் மஸ்க்கின் நீண்டகால வளர்ச்சி திட்டங்கள் மீது முதலீட்டாளர்கள் தொடர்ந்து நம்பிக்கை வைத்து வருவது இந்த ஐபிஓ வெற்றியின் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Related News

Latest News