கோடிக்கணக்கான மக்களின் உயிரை பழிவாங்கிய “BLACK DEATH”

258
Advertisement

நம் அனைவரிடையேயும் மிகப்பெரிய நோய் தொற்று எதுவென்று கேட்டால் சிறுகுழந்தை கூட சொல்லுவது ‘CORONA” என்று தான்.

ஆனால் எவரும் நம்பமுடியாத அளவிற்கு 1300 –களில் திட்டத்தட்ட 20 கோடி மக்களின் உயிரை கொடிய நோய் ஒன்று அச்சுறுத்தியுள்ளது,வரலாற்றிலேயே அதிக மக்களின் உயிரை கொன்ற ஒரு நோய் இதுதான் எனக்கூறப்படுகிறது.

ஐரோப்பாவில் வாழும் 3 சதவிகித மக்கள் தொகையை 1 சதவிகிதமாக குரைததும் இந்த நோய் தான்,இப்படி பட்ட இந்த நோயை ஐரோப்பாவில் 1300 களில்BLACK DEATH ” என்று கூறினார்களாம் இந்த நோயின் உண்மையான பெயர்  ‘bubonic plague” என்றும் இந்த நோயை உருவாக்கும் பாக்டீரியாவின் பெயர் bacterium yersinia pestis  என்றும் அழைக்கப்படுகிறது.

1300 காலகட்டத்தில் ஐரோப்பாவில் மட்டுமின்றி மிக பெரிய நாடுகளிலும் கடல் வணிகம் சிறந்துவிளங்கியது இந்நிலையில் 1351-ல் ஐரோப்பாவில் ,சிசிலியன் துறைமுகம் மெஸ்சினாவிற்கு கப்பல் ஒன்று வந்தது ,அங்கிருக்கும் மக்கள் அனைவரும் அந்த கப்பலில் ஏதோ வணிகத்திற்காக பொருட்கள் வந்திருப்பாக நினைத்துக்கொண்டிருந்தனர் ஆனால் அவர்களின் சிந்தனைக்கு மாறாக அந்த கப்பலின் குல் கப்பலில் வேளை பார்த்த அனைவரும் இறந்து இருந்ததாகவும் மற்றவங்க உடம்பில் ரத்தம் வடிதலுடன்கூடிய பெரிய பெரிய கொப்புளங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அங்கிருப்பவர்கள் நோய் தோற்று பரவாமல் இருப்பதற்காக அந்த கப்பலை திருப்பி அனுப்பிவிட்டார்கள் அதற்குள் அந்த நோய் தொற்று துறைமுகத்திற்குள் இருந்தவர்களுக்கு பரவி இருந்தது ,இந்த நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாக பார்க்க்ப்பட்டவை எலிகள்.

எலிகள் மீது இருக்கும் FLEAS எனப்படும் ஒருவகையான பேன்கள் தான் என கண்டறிந்தனர்.இந்த FLEAS மாடு ,ஆடுகள் போன்றவற்றிற்கேல்லாம் பரவக்கூடியவை.இந்த நோய் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு  பரவியது.இந்த நோய் பதிவுக்கப்பட்டவர்களின் மூச்சு காற்று ,துணிகள்,ரத்தம் போன்றவற்றிலிருந்து தோற்று பரவும் என கூறப்படுகிறது.

1347 லிருந்து 1351 வரை ஐரோப்பா ,ரஷ்யா ,நார்த் ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் மிக அதிக பாதிப்பு ஏற்படுத்திய இந்த நோய் தொற்றினால் தான் ஐரோப்பாவில் 20 கோடி மக்களின் உயிர் மற்றுமின்றி கால்நடைகளின் உயிரும் பறிபோனது .

இன்னும் இந்த ‘bubonic plague” என்னும் நோய் உலகத்தில் எதோ ஒரு மூலையில் இருந்துகொண்டிருக்கிறதாம் ,மற்றும் இந்த நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.