ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 5 இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்தர்.100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் குணார் என்ற பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. இதேபோல், மேலும் 3 இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே, நிலநடுக்கத்தால் 15 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.