Thursday, June 12, 2025

‘Fastag’ -இல் அதிரடி மாற்றம்! இனி இதெல்லாம் தேவை கிடையாது! நோட் பண்ணிக்கோங்க!

இந்தியாவின் சுங்கச் சாவடிகள் விரைவில் புதிய மாற்றத்தை சந்திக்க இருக்கின்றன. சுங்கக் கட்டண முறையை இன்னும் சிறப்பாகச் செய்யும் நோக்கில், தானியங்கி எண் பலகை அங்கீகார தொழில்நுட்பம், அதாவது ANPR தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய முறையை தேசிய நெடுஞ்சாலை துறை அறிமுகப்படுத்த இருக்கிறது.

இதன் மூலம் பயண நேரம் குறையும், சுங்கச் சாவடிகளில் நெரிசல் இல்லாமல் சுலபமாக கடக்க முடியும். முக்கியமாக, வரும் காலங்களில் சுங்க கட்டணம் கிலோமீட்டர் அடிப்படையில் வசூலிக்கப்படும். அதாவது நீங்கள் எவ்வளவு தூரம் பயணிக்கிறீர்களோ, அதற்கேற்றபடி கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும். இது வரை, சில கிலோமீட்டர் பயணித்தாலும் முழு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த புதிய முறையால் அந்த சிக்கல் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள விதிகளில், ஒரு திட்டத்திற்குள் 60 கிலோமீட்டருக்கு நிலையான கட்டணம் உள்ளது. ஆனால் புதிய திட்டத்தில் பயனாளர்களுக்கு நியாயமான கட்டண அமைப்பு கிடைக்கும்.

FASTag தொழில்நுட்பம் தற்போது ரேடியோ அதிர்வெண்களின் அடிப்படையில் பணமில்லா கட்டண வசூலுக்கு பயன்படுகிறது. இப்போது அதில் ANPR தொழில்நுட்பம் இணைக்கப்பட இருக்கிறது. இந்த தொழில்நுட்பம், கேமரா மூலம் வாகன எண் பலகையை படித்து, வாகனங்களை சாவடியில் நிற்காமல் ஓட்டுவதற்கான வசதியை வழங்கும்.

இதில் விதிமுறைகளை மீறினால், பயனாளர்களுக்கு மின்-அறிவிப்பு மூலம் எஸ்எம்எஸ் வரும். கட்டணம் செலுத்தாமல் சென்றால், அந்த பயனாளியின் FASTag தற்காலிகமாக நிறுத்தப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படும்.

இதனால்தான், இதை தடையற்ற சுங்க வசூல் முறை என அதிகாரிகள் விளக்குகிறார்கள். போக்குவரத்து நெரிசல் குறையும், பயண நேரம் மிக்க சிறப்பாகக் குறையும் என்பதே எதிர்பார்ப்பு.

இதே நேரத்தில், FASTag ஐ ரீசார்ஜ் செய்யும் சிக்கலும் இனி இருக்காது. இந்திய ரிசர்வ் வங்கி தற்போது FASTag-ஐ இ-மேண்டேட் கட்டமைப்புடன் இணைத்துள்ளது. இதன் மூலம், உங்கள் FASTag பணம் குறைந்தவுடன், உங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாகவே பணம் சேர்க்கப்படும். நெட்பிளிக்ஸ் அல்லது OTT பிளாட்பாம்களில் மாதாந்திர கட்டணம் தானாக பிடிக்கப்படுவது போலவே.

இதற்காக நீங்கள் ஒரு முறை இ-மேண்டேட் அனுமதி கொடுத்தாலே போதும். இனி ஒவ்வொரு முறையும் FASTag ஐ ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news