Monday, December 1, 2025

தங்கம் விலை உயர்ந்தாலும் கவலை வேண்டாம்! தங்க வியாபாரிகள் சொன்ன சீக்ரெட்!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு சவரன் தங்கம் தற்போது 94,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தைகளில் முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிகளவில் வாங்கத் தொடங்கியிருப்பதே இந்த உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினரும், திருமணம் விசேஷம் திட்டமிட்டிருக்கும் குடும்பங்களும் கவலைப்படும் நிலை உருவாகியுள்ளது.

கடந்த வாரத்தில் சற்று சரிவைக் கண்ட தங்கம், மீண்டும் உயர்வு பாதையில் நகரத் தொடங்கியுள்ளது. ஒரு கிராம் தங்கம் 80 ரூபாய் அதிகரித்து, தற்போது 11,800 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது. இதன் தாக்கம் இல்லத்தரசிகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. “இனி விலை எப்போது குறையும்?” என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

இதற்கிடையில், வெள்ளி விலையும் உயர்வைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 176 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி 1,76,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதிலும் கிராமுக்கு 2 ரூபாய் உயர்வு பதிவாகியுள்ளது.

மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி போன்ற முக்கிய நகரங்களிலும் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையைப் போல் கிராமுக்கு 11,800 ரூபாய் என்ற நிலையில் உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதும் பழக்கம் அதிகமுள்ளதால், விலை உயர்ந்தாலும் நடுத்தர மக்களிடையே தங்கம் வாங்கும் பழக்கம் தொடர்ந்துவந்ததாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்க விலை உயர்வு ரீட்டெயில் வணிகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலையில், தங்கம் வாங்குபவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வாங்குவது நிபுணர்களின் ஆலோசனையாகும். கார்த்திகை மாதத்துக்குப் பிறகு விலையில் குறைவு வரக்கூடும் என தங்க வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News