இது தெரியாம மொபைல் செயலிகள் மூலம் கடன் வாங்காதீங்க..! இல்லைனா சிக்கல்தான்.!

மொபைல் அப்ளிகேஷன்களிலிருந்து கடன் வாங்குவது, அவசர நிதி தேவைகளை உடனடியாக தீர்க்க ஒரு எளிய மற்றும் விரைவான வழியாக இருந்து வருகிறது. ஆனால், இந்த டிஜிட்டல் கடன் சேவைகள் அதிகரிக்கும் சூழலில், வாடிக்கையாளர்கள் சில முக்கிய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

முதலில், நீங்கள் கடன் எடுக்கும் அப்ளிகேஷன் உண்மையானதா என்று உறுதி செய்ய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனம் (NBFC) இந்தியாவின் ரிசர்வ் பேங்க் (RBI) இலிருந்து பதிவு பெற்றுவிட்டதா என்பதை சரிபார்க்க வேண்டும். இதற்கு RBI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காட்டப்படும் டிஜிட்டல் கடன் வழங்குநர்கள் மற்றும் கடன் சேவை வழங்குநர்களின் பட்டியலை பார்வையிடலாம்.

அதிகாரப்பூர்வ அப்ளிகேஷன் ஸ்டோருகளில் இல்லாத அல்லது APK கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் ஆலோசனைகளை தவிர்க்க வேண்டும். கடன் அங்கீகார அப்பிளிகேஷன்களில் தெளிவான Privacy Policy வேண்டும். அதில் தேவையற்ற அனுமதிகள் (காண்டாக்ட், புகைப்படங்கள், இடம் போன்றவை) கோரப்பட கூடாது.

குறைந்த ஆவணங்கள் அல்லது மிக குறைவான வட்டி விகிதத்தில் உடனடி கடன் வழங்குவதாக கூறும் செயலிகளை எச்சரிக்கையுடன் அணுகியிருங்கள். கடனை திருப்பி செலுத்தும் விதிமுறைகள் மற்றும் காலக்கெடுக்கள், கூடுதல் கட்டணங்கள் ஆகியவை சட்டத்திற்கு புறம்பாக இருக்கக்கூடும்.

கடன் ஒப்பந்தத்தை முழுமையாக கவனமாகப் படித்து, மொத்த செலவு, வட்டி விகிதம், திருப்பிச் செலுத்தும் நிபந்தனைகள் போன்றவற்றை நன்கு புரிந்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர் சேவை தொடர்பான தெளிவான விவரங்களும் மிக அவசியம்.

கடன் வாங்கிய பிறகு ஏதாவது ஒரு கட்டத்தில் உங்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதாகவோ அல்லது அச்சுறுத்துவதாகவோ அல்லது அசௌகரியமாக உணர்ந்தால் உடனடியாக சைபர் கிரைம் செல் அல்லது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா போர்டலில் புகார் ஒன்றை பதிவு செய்யுங்கள்.

மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் கிடைக்கும் கடன்கள் எளியதாக இருந்தாலும், உங்கள் பொருளாதார பாதுகாப்பிற்காக சரியான தேர்வும் விழிப்பும் அவசியம்.

Related News

Latest News