Tuesday, September 30, 2025

Fridge மீது இந்த பொருட்களை மறந்து கூட வைக்காதீங்க! அப்புறம் பிரச்சனையாயிடும்! உஷார் மக்களே!

பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் போன்ற வீட்டு உபகரணங்களை பராமரித்தாலும், அடிக்கடி பழுதடைகின்றன என்ற குற்றச்சாட்டை நம்மில் சிலர் கேட்டிருப்போம். இதற்கு காரணமாக, நமது தினசரி பழக்கங்களில் செய்யப்படும் சில சிறிய தவறுகள் குறிப்பிடப்படுகின்றன.

தொழில்நுட்ப வல்லுநர் சைலேந்திர சர்மா, பிரிட்ஜ் மற்றும் ஏசி பழுதுபார்ப்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர். அவர் Fridge-ன் மேல் எதையும் வைக்கக் கூடாது என அறிவுறுத்துகிறார். காரணம், Fridge மேலிருந்து வெப்பத்தை வெளியிடுகிறது. மேலே பொருட்களை வைப்பது வெப்ப வெளியீட்டுக்கு தடையாகும் மற்றும் இது கம்ப்ரசர் மற்றும் வாயு வடிவமைப்பில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே, Fridge-ன் மேல் பகுதியை எப்போதும் காலியாக வைத்திருப்பது முக்கியம்.

பலர் Fridge-ன் மேல் மைக்ரோவேவ் வைப்பதாலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏற்கனவே மைக்ரோவேவ் அதிக வெப்பத்தை வெளியிடும் சாதனம். இதன் காரணமாக Fridge-ன் வெப்ப வெளியீடு தடைப்பட்டு, வாயு கசிவு, கம்ப்ரசர் சேதம் போன்ற கடுமையான பிரச்சனைகள் ஏற்படும்.

மேலும், சிலர் தூசி தடுக்கும் நோக்கில் Fridge மேல் பிளாஸ்டிக் அல்லது துணி மூடுகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் இது வெப்ப வெளியீட்டை தடுக்கும் என்பதால் குளிர்சாதன பெட்டிக்கு தீங்கு விளைவிக்கும்.

சூடான உணவுகளை நேரடியாக Fridge வைப்பதும் தவறு. இது பிரிட்ஜில் வெப்பத்தை அதிகரித்து, கம்ப்ரசரில் சுமையை உருவாக்கும். இதனால் குளிர்சாதன பெட்டியின் செயல்திறன் குறையும் மற்றும் ஆயுள் குறையும் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News