Saturday, December 27, 2025

தீப்பிடித்து எறிந்த ஆம்புலன்ஸ் : 4 பேர் உடல் கருகி பலி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பிறந்த குழந்தையின் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்புலன்சில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆம்புலன்ஸின் பின்புறத்தில் தீப்பிடிப்பதைக் கவனித்த ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார்.

முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஓட்டுநர் மற்றும் குழந்தையின் பெற்றோரின் உறவினர்கள் காயங்களுடன் தப்பினர். ஆனால் பின்புறத்தில் இருந்த நான்கு பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News

Latest News