Wednesday, June 4, 2025

பிற வங்கி ATM-களை யூஸ் பண்றீங்களா? நோட் பண்ணுங்க

தற்போது டிஜிட்டல் உலகம் மயமாகிவிட்டது. கூலி தொழிலாளர்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரையில் தொழிலாளர்களுக்கான ஊதியமானது வங்கிக் கணக்கி வரவு வைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி பலரும் Gpay ,Paytm இது போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தணைகளை செய்து வந்தாலும், சிலர் கையில் பணம் வைத்தே செலவு செய்து வழக்கம்.

ATM-மில் பணம் எடுப்பதற்கு குறிப்பிட்ட முறைக்கு மேல்  எடுத்தல் வந்தால் 20 ரூபாய் வரையில் கட்டணம் பிடிக்கப்பட்டது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.. வங்கிகளில் ATM -களில் ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் விதிக்கப்படுகிறது. அதேபோல, தங்களுடைய வங்கி அல்லாத மற்ற வங்கிகளின் ATM-களில் இருந்து பெருநகரங்களில் ஒரு மாதத்துக்கு 3 முறையும், கிராமப்புறங்களில் 5 முறையும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை அமலில் உள்ளது

இந்த நிலையில்  இந்தியன் வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டண விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது..

அதாவது இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்ட தடவை பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அனுமதிக்கப்பட்ட தடவைகளை தாண்டி பிற வங்கி ATMகளில் பணம் எடுத்தால் தற்போது ரூ. 21 மற்றும் GST வரியாக 3 ரூபாய் 78 காசுகள் சேர்த்து 24 ரூபாய் 78 காசுகள் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், ஜூலை 1 ஆம் தேதிக்குப் பிறகு இந்த கட்டணம் உயர்கிறது,.. அதாவது ரூ.2 அதிகரித்து 26 ரூபாய் 78 காசுகள் என்ற அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கு அல்லாத மற்ற வங்கிகளின் ATMகளில் இருந்து பணம் எடுத்தால், நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் அந்த வங்கிகளுக்கு தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேவை ஆற்றியதற்காக ATM உள்பரிமாற்ற கட்டணங்களைச் செலுத்தும்.

அதற்காகத்தான் பிற வங்கி ATMகளைப் பயன்படுத்தும்போது பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தனியார் வங்கிகளும் மற்ற வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வை ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news