இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் இருந்தால் போதும் நாம் இருக்கும் எந்த பகுதிக்கும் யாரிடமும் வழி கேட்காமல் சென்று வந்துவிடலாம் என்ற, அந்த அளவிற்கு பிரபல வழிகாட்டி சேவை தளமாக கூகுள் மேப்ஸ் இருக்கிறது.
இந்த நிலையில், இந்த கூகுள் மேப் பயன்படுத்துவோரின் வசதியேற்ப சில அம்சங்களை கொண்டு வந்துள்ளது இதனை பற்றி தற்போது பார்க்கலாம்..
அதாவது, கூகுள் AI-யான ஜெமினியுடன் கூகுள் மேப்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால் பயன்படுத்துவோர் தங்கள் செல்போனை தொடாமல் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபட முடியும், மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கூகுள் மேப்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தால், சாலையில் உள்ள போக்குவரத்து தடைகள், மாற்றுப்பாதைகள் குறித்தான தகவல்கள் கிடைக்கும்.
*விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளை நெருங்கும்போது பயனர்களை கூகுள் மேப்ஸ் இப்போது முன்கூட்டியே எச்சரிக்கும்.
*இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்காக, மேப்ஸ் புதிய அவதார் வசதியையும் வழங்குகிறது.
*பயண மேலாண்மையை எளிதாக்கும் வகையில், கூகுல் வாலட் இணைப்பும் வழங்கப்படுகிறது.
*குறிப்பாக, கூகுள் மேப்ஸ் மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் வாங்கும் வசதி உள்ளிட்டவையும் புதிய அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.
