Friday, June 6, 2025

உக்ரைனுக்கு மரண அடி ‘காத்திருக்கு’ ! டிரம்பிடம் புடின் சொன்ன அந்த வார்த்தை!?

ரஷ்யா-உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. சமீபத்தில், ரஷ்யாவின் முக்கியமான விமான தளங்கள் மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய டிரோன் தாக்குதல் உலகை அதிரவைத்தது. இந்த தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் சேதமடைந்தன.

இதற்குப் பதிலடியாக, ரஷ்யா தனது டிரோன்களை பயன்படுத்தி உக்ரைனின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியது. இதேவேளை, ரஷ்யாவுடன் கிரீமியாவை இணைக்கும் பெரிய பாலம் மீதும் உக்ரைன் தாக்குதல் நடத்தியது. நீருக்கடியில் வெடிகுண்டுகளை வைத்து, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் வகையில் துல்லியமாக தாக்கம் செய்யப்பட்டது. இதற்காக சுமார் 1,100 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைனின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேசினர். இருவரும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உக்ரைன் விவகாரம், விமானத் தள தாக்குதல்கள், மற்றும் ஈரானின் அணு ஆயுத பேச்சுவார்த்தை பற்றியும் விவாதித்தனர்.

பேச்சுக்குப் பிறகு தனது சமூக வலைதளத்தில் டிரம்ப், “புதினுடனான உரையாடல் சிறப்பானதாக இருந்தது. ஆனால் உடனடியாக அமைதி ஏற்படும் நிலைக்கு இது செல்லவில்லை” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “ரஷ்யா, உக்ரைன் நடத்திய தாக்குதல்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கும் என புதின் திட்டவட்டமாக தெரிவித்தார்” என்றும் கூறினார்.

இந்த உரையாடல் மே 19ஆம் தேதிக்குப் பிறகு இருவருக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது உரையாடலாகும். பின்வரும் நாட்களில், இந்த பேச்சுவார்த்தைகள் யுத்தம் குறையும் வாய்ப்பு ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news