சென்னையிலிருந்து 220 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள டிட்வா புயலால் நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிறது மழை. இன்றும் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
