வலுவிழக்கும் காங்கிரசின் கை – என்ன காரணம்?

241
Advertisement

இந்தியாவில் வருகிற 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அதன் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்.

நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 31 சட்டப்பேரவைகளில், காங்கிரஸ் கட்சி 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.

சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் மட்டுமே அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் முதல்வர்களாக உள்ளனர். அதிலும் நடந்து முடிந்த தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

https://youtu.be/XuFv9RGjjFk

சுதந்திர இந்தியாவில் தனிப் பெரும் கட்சியாக விளங்கிய காங்கிரஸ் கட்சி, தற்போது மிகவும் வலுவிழந்து காணப்படுவது அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.