Friday, June 6, 2025

‘cognizant’ நிறுவனத்தின் அட்டகாசமான வேலைவாய்ப்பு! அனுபவம் தேவையில்லை!

இந்தியாவில் பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட், புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் அனலிஸ்ட் டிரெய்னி (Analyst Trainee) எனும் பதவிக்காக நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுவரை வேலை அனுபவம் இல்லாத, புதியவர்களுக்கு இதுவே ஒரு பெரிய வாய்ப்பு.

பிசிஏ, பிஎஸ்சி, பிஏ, பிகாம், பிபிஏ,BVoc, BMC போன்ற 3 ஆண்டு கல்லூரி படிப்பை 2025ம் ஆண்டில் முடிக்க இருக்கும் மாணவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லூரி படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். மேலும், எந்த ஷிப்ட்டிலும் பணியாற்ற தயார் என்ற மனப்பாங்கும் இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, புனே, கொச்சி, புவனேஸ்வர் மற்றும் இந்தூர் உள்ளிட்ட 9 நகரங்களில் பணிக்கு நியமிக்கப்படுவார்கள். எந்த நகரத்தில் நியமனம் செய்யப்பட்டாலும், பணியை ஏற்கும் மனப்பாங்குடன் இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பில் சம்பள விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் திறமையைப் பொருத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க ஜூன் 15ம் தேதியே கடைசி நாள். அதற்குள் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கின்றோரின் ஆவணங்கள் முதலில் ஸ்க்ரீனிங் செய்யப்படும். அதன் பிறகு மூன்று கட்ட ரவுண்ட்கள் இருக்கும். முதலில் Communication Assessment, அதற்குப் பிறகு Aptitude Test, கடைசியாக ஒரு ஆன்லைன் இண்டர்வியூ நடத்தப்படும்.

மேலும் வேலைக்கான அறிவிப்பை பெற careers.cognizant.com என்னும் வலைதளத்தின் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்!

கல்லூரி முடித்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. அந்த வாய்ப்பை தவறவிடாமல், உடனே தயாராகுங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news