வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. மேலும்,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
