Saturday, December 27, 2025

இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு : வடமாவட்டங்களுக்கு பாதிப்பு?

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. வருகிற 7-ந் தேதி வரை வட மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் பகலில் வெயில், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்க உள்ளது. 8, 9 மற்றும் 10-ந் தேதிகளில் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்த மாதம் இயல்பைவிட குறைவாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் முதல் பாதியில் வெயில் சுட்டெரித்தாலும், இரண்டாம் பாதியில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வருகிற 12-ந் தேதிக்கு பிறகு கிழக்கு திசை காற்று தமிழக பகுதிகளுக்குள் வருகிறது. இதனை தொடர்ந்து 23-ந் தேதி முதல் 30-ந் தேதிக்கு இடைபட்ட நாட்களில் புயலுக்கான வாய்ப்பு உள்ளதாகவும், இந்த புயலினால் வட மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Related News

Latest News