Friday, December 26, 2025

மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என மத்திய பாஜக அரசு நிராகரித்துள்ளது என்று கூறியுள்ளார். அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு என்று முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்..

அதேபோல மதுரை, கோவையின் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம் என்று உறுதியளித்துள்ளார்.

Related News

Latest News