Saturday, July 12, 2025

எல்.ஐ.சி பங்குகள் மீண்டும் விற்பனை : மத்திய அரசு முடிவு

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) பங்குகளின் சிறிய அளவிலான பகுதியை மீண்டும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசிடம் 96.5% பங்குகள் உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு மே மாதத்தில், முதல் முறையாக 3.5% பங்குகள் பொதுப் பங்கு வெளியீடு (IPO) மூலம் விற்பனை செய்யப்பட்டது; அப்போது ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயிக்கப்பட்டு, அரசுக்கு ரூ.21,000 கோடி வருவாய் கிடைத்தது.

எல்ஐசி பங்குகள் தற்போது ரூ.926.90 என்ற விலையில் பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படுகிறது (ஜூலை 10, 2025 நிலவரப்படி). 2027 மே 16-ஆம் தேதிக்குள், மொத்தமாக 10% பங்குகள் சந்தையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறையின்படி, இந்த புதிய பங்கு விற்பனை நடைபெற உள்ளது.

சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து, எப்போது மற்றும் எவ்வளவு பங்குகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதை DIPAM மற்றும் எல்ஐசி நிர்வாகம் முடிவு செய்யும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news