Saturday, December 27, 2025

கோழிகறிக்காக நடந்த சண்டை : 15 பேர் காயம்

உத்​தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகு​தி​யில் அண்​மை​யில் ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது நடை​பெற்ற விருந்​தில் கோழி இறைச்​சித் துண்​டு​கள் குறைந்த அளவுக்கு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விருந்து வகைகளைப் பரி​மாறும் நபர்​கள் தங்​களை மோச​மாக நடத்​தி​ய​தாக​வும் மணமகன் வீட்​டார் கோபப்​பட்​டனர்.

ஒரு கட்​டத்​தில் இரு வீட்​டாரும் தகராறில் ஈடுபட்டனர். இதனால் திருமண மண்​டபமே களேபர​மானது. இதையடுத்து அங்கு போலீ​ஸார் வரவழைக்​கப்​பட்​டனர். இந்த சண்​டை​யில் 15 பேர் காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர்.

Related News

Latest News