விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் ராமதாஸ் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபரை, போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
