பாகிஸ்தானுக்கு இன்னொரு புதிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது… இது இந்தியா அல்ல. ஆனால், பாகிஸ்தானின் மிக பெரிய எதிரியாகக் கருதப்படும் இன்னொரு நாடு — ஆப்கானிஸ்தான், தற்போது தற்கொலை ட்ரோன் விமானப்படை ஒன்றை உருவாக்கியுள்ளது!
இந்த ஆப்கான ட்ரோன்கள், காமிகேஸ் ட்ரோன்கள் என அழைக்கப்படுகின்றன. இது இலக்கைத் தாக்கும்போது வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. இவை இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, குவெட்டா, பெஷாவர் போன்ற பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது நேரடியாக தாக்கமளிக்கக்கூடிய சக்தி கொண்டவை.
இந்த ட்ரோன் விமானப்படை, ஆப்கானிஸ்தானில் உள்ள முன்னாள் பிரிட்டிஷ் SAS வான்படை தளத்தில் சோதனை செய்யப்படுகிறது. லோகார் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த வான்படை தளம், 20 ஆண்டுகளாக பிரிட்டிஷ் படைகளால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது அது தாலிபான்களின் மரண ட்ரோன்களுக்கு சோதனை மையமாக மாறியுள்ளது.
மேலும் அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், தாலிபான்கள் பல சர்வதேச ட்ரோன் நிபுணர்களை பணியமர்த்தி, நூற்றுக்கணக்கான ட்ரோன்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும், முன்னாள் அமெரிக்க இராணுவ முகாம் ‘Camp Phoenix’ இப்போது இந்த ட்ரோன்கள் தயாரிக்கப்படும் ரகசிய உற்பத்தி மையமாக மாறியுள்ளது. இந்த இடத்திலேயே ட்ரோன்கள் உருவாக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, பாகிஸ்தான் எல்லையில் சமீபத்தில் நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் எல்லையில் குறைவான வான் பாதுகாப்பு அமைப்புகளே உள்ளதால், இந்த ட்ரோன்கள் அங்கு எளிதாக நுழைந்து தாக்கம் செலுத்தும் வாய்ப்பு மிக அதிகம்.
இந்த வளர்ச்சி, பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல; முழு பிராந்தியத்திற்கே புதிய நிலைமாற்றத்தை கொண்டு வரக்கூடியதாக இருக்கிறது…